search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்குத்து உறிஞ்சு குழி"

    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.
    • குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது

    அவிநாசி :

    கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கிறது. கழிவுநீருடன் குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது.இதனை குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பில், செங்குத்து உறிஞ்சுகுழி அமைக்க ஊரக வளர்ச்சி முகமை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கால்வாய் அல்லது வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள சல்லடையில் தண்ணீருடன் வழிந்தோடி வரும் குப்பை, பாலிதீன் போன்ற பொருட்கள் தேங்கி நின்று தண்ணீர் மட்டும் உறிஞ்சுகுழியில் விழுந்து நிலத்தடிக்கு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பல இடங்களில் இத்திட்டம் உரிய பலன் தருவதில்லை என்ற புகார் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வழிந்தோடி வரும் கால்வாயில் ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு உரிய பலன் தருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×