search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூடான் போர்"

    • நேற்று முன்தினம் தனி விமானத்தில் 231 இந்தியர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும், 328 பேர் டெல்லிக்கும் வந்து சேர்ந்தனர்.
    • இதுவரை 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

    இந்த சண்டையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஒவ்வொரு நாடும் சூடானில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்து வருகிறார்கள். அதுபோல், சூடானில் வசித்து வரும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக, 'ஆபரேஷன் காவேரி' என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    சூடானில் சண்டை நடந்து வரும் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், பஸ்கள் மூலமாக போர்ட் சூடான் நகருக்கு வரவழைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து விமானம் அல்லது கப்பல்கள் மூலமாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.

    நேற்று முன்தினம் தனி விமானத்தில் 231 இந்தியர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும், 328 பேர் டெல்லிக்கும் வந்து சேர்ந்தனர்.

    இந்நிலையில், நேற்று மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மும்பைக்கு வர்த்தக விமானத்தில் வந்து சேர்ந்தனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

    இதுவரை 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    • முதல் தொகுப்பாக, கடந்த 26-ந் தேதி 360 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்.
    • நாள்தோறும் விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

    புதுடெல்லி :

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சண்டையில் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையை அந்தந்த நாடுகள் தொடங்கி உள்ளன.

    சூடானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக தெரிகிறது. அவர்களை பத்திரமாக மீட்க 'ஆபரேஷன் காவேரி' என்ற மீட்பு நடவடிக்கையை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.

    தலைநகர் கார்டூம் மற்றும் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள், பஸ்கள் மூலம் போர்ட் சூடான் நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் அல்லது இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானங்களிலோ அல்லது பயணிகள் விமானங்களிலோ இந்தியாவுக்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள்.

    முதல் தொகுப்பாக, கடந்த 26-ந் தேதி 360 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். நாள்தோறும் விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மேலும் 186 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

    அதே சமயத்தில், போர்ட் சூடானில் இருந்து 122 இந்தியர்கள் நேற்று ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதுவரை மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 500 இந்தியர்கள் தாயகம் வந்து சேர்ந்து இருப்பதாக அரிந்தம் பாக்சி கூறினார். அவர்களுடன் சேர்த்து சூடானில் இருந்து இதுவரை 3 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மீட்பு நடவடிக்கைக்காக ஜெட்டா, போர்ட் சூடான் ஆகிய நகரங்களில் இந்தியா கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. மேலும், கார்டூம் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. அத்துடன், டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சக தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறது.

    • சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது.
    • போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கெய்ரோ:

    சூடான் நாட்டில் ராணு வத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போர் 3- வது வாரமாக நீடிக்கிறது.

    சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது. இதையடுத்து மற்ற நாட்டினர் சூடானில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

    இரு தரப்பு ராணுவத்தினரும் போர் நிறுத்தத்தை நீட்டித்த போதிலும் அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டுதான் உள்ளது. தலைநகர் கார்ட்டூம் உள்பட பல இடங்களில் இன்னும் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே தான் உள்ளது. அங்குள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே சண்டை நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த சண்டையால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. உணவு பொருட்களுக்கும் கடுமையாக பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

    சூடானில் 3-ல் ஒரு பங்கு ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் போரில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதையடுத்து சூடானில் காயம் அடைந்தர்களுக்கு உதவும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மூலம் 8 டன் மருந்து பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜோர்டானில் இருந்து போர்ட் சூடானுக்கு விமானம் மூலம் இந்த மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    • சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
    • சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்தது.

    கார்டூம் :

    ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது.

    இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்தது. இதனால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பலர் உயிரிழந்தனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனையேற்று இரு தரப்பினரும் தற்காலிகமாக போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனை பயன்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகள் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகள், பொதுமக்களை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆனால் 3 வாரங்களை தாண்டி நடந்து வரும் இந்த உள்நாட்டு போரால் தற்போது அங்கு பலியானோரின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் தலைநகர் கார்டூம் மற்றும் மேற்கு டார்பூர் தவிர பெரும்பாலான மாகாணங்களில் போர் நிறுத்த நடவடிக்கையானது தற்போது அமைதியை கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

    • ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த எட்டாவது விமானம் இது.
    • சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

    இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த எட்டாவது விமானம் இது ஆகும். இதன் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    "இந்திய வான்படையை சேர்ந்த ஏ சி-130 ரக விமானம் 40 பயணிகளுடன் புது டெல்லியில் தரையிறங்கி இருக்கிறது. இந்த விமானத்தில் வந்தவர்களை சேர்த்தால், சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது," என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.

     

    இதுதவிர 229, 228 மற்றும் 135 பயணிகளுடன் மேலும் மூன்று விமானங்கள் இந்தியா வரவுள்ளன. இவற்றை சேர்க்கும் பட்சத்தில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ கடந்துவிடும்.

    முன்னதாக சனிக்கிழமை அன்று 365 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பினர். இவர்கள் வந்த விமானம் புது டெல்லியில் தரையிறங்கிது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் அந்நாட்டில் சிக்கித்தவிக்கும் தங்களது குடிமக்களை மீட்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றன.

    • உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
    • 7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் 'ஆபரேஷன் காவேரி' திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போடாததுதான் காரணம்.

    தனிமைப்படுத்தலுக்காக, வருகை மையங்களில் விமான நிலைய சுகாதார அதிகாரிகளின் நிர்வாகத்திலும், மேலும் பல ஆஸ்பத்திரிகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் இலவசமாக தங்கவைப்படுவார்கள்.

    7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
    • இந்தியர்கள் நாடு திரும்பிய தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சூடானில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    முதலில் சூடானில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

    ஏற்கனவே 4 கட்டமாக 1,360 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்து புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

    • ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்து உள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உள்நாட்டுப்போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன.

    அதன்படி சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதற்காக விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.

    உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்து வரும் தலைநகர் கார்தூம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

    சூடானில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவினர் கடந்த 26-ந்தேதி டெல்லி வந்தடைந்தனர். அடுத்ததாக 246 இந்தியர்களை விமானப்படை விமானம் நேற்று முன்தினம் ஜெட்டாவில் இருந்து மும்பை கொண்டு வந்து சேர்த்தது.

    இதைத்தொடர்ந்து மற்றொரு விமானப்படையின் சி.17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 392 இந்தியர்கள் அடங்கிய 3-வது குழுவினர் நேற்று டெல்லியை அடைந்தனர்.

    இதைப்போல மேலும் 362 பேரை கொண்ட 4-வது குழுவுடன் மற்றொரு விமானம் நேற்று பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது.

    இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த 1,360 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் இந்த ஆபரேஷன் காவேரி நடவடிக்கைக்காக ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    இந்த மையங்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதனால் இந்த மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்து உள்ளது.
    • போராட்டக்காரர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கெய்ரோ:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்துள்ளது. அங்குள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இருபடையினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்து இருந்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    இதுவரை தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி சூடானில் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பதற்றம் நிறைந்த டார்மர் மாகாணத்தில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மாகாணத்தில் ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஜெனனா நகர முக்கிய சந்தை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ராணுவ படையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தர்பார் பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரியும் போராட்டக்காரர்கள் கடைகள், மால்கள், மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்கள் மற்றும் நகை, பணத்தை சூறையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×