என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலாப் பயணிகள்"
- 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணை உள்ளது.இந்தப் பண்ணையில் 22 ஆண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது விலங்குகளின் மார்பளவு சிலைகள், ஊஞ்சல், சருக்கு விளையாட்டு, சுவற்றில் முதலைகளின் ஓவியம், புல்தரை, வனவிலங்குகளின் சிலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதனால் முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று அமராவதிஅணை பகுதியில் சுற்றுலாபயணிகள் திரண்டனர். பின்னர் அணைப்பகுதி, ஒன்பது கண் மதகுகள் முன்பு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து முதலைப்பண்ணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் முதலைகளை பார்த்து ரசித்தனர். புதிதாக பிறந்துள்ள முதலை குட்டிகள் அங்கும் இங்கும் ஓடிப் பிடித்து விளையாடியது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து அங்குள்ள வனவிலங்குகளின் சிலைக்கு முன்பு புகைப்படம் எடுத்ததுடன் ஊஞ்சல்,சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி, ராக் கார்டன், முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் இயற்கை சூழலை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் விட்டு திரும்பி சென்றனர். இதனால் திருமூர்த்தி அணை அங்கிருந்து அருவி கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
- மேட்டூர் அணை பூங்காவை ஒரே நாளில் 8 ஆயிரத்து 560 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர் பார்வையாளர் கட்டணமாக ரூ.46 ஆயிரம் வசூலானது.
- கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்காவில் நேற்று காலை முதலே சுற்று லா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் மேட்டூர் அணைப் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அணையைப் பார்வையிட்ட பொதுமக்கள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.
அணைக்கட்டு முனியப்பனுக்கு வேண்டுதல் வைத்த பொதுமக்கள் ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். குடும்பத்துடன் அணைப் பூங்காவுக்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனர்.மீன் கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் மீன் வியாபாரம் அதிகரித்தது. மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ைண, மான் பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர். சிறியவர்களுடன் பெரியவர்களும் ஊஞ்சலாடி சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக நிழல் தரும் மரத்தின் அடியிலும் புல் தரையிலும் அமர்ந்து பொழுதை கழித்தனர்.
மேட்டூர் அணைப் பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 8,560 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ.42 ஆயிரத்து 800 வசூலானது. மேட்டூர் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 643 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் ரூ.3,215 பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் ரூ.46 ஆயிரம் வசூலானது. கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்