search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தலம்"

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவி உள்ளது
    • இதனை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி ஊரா ட்சியில் நங்காஞ்சியாற்றின் மறுகரையில் ஆதிதிரா விடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மழைக்காலத்தில் நங்காஞ்சி யாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அமைச்சர் அர.சக்கரபாணியிடம் அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நபார்டு வங்கி உதவியுடன் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2.23 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணி த்துறை அனுமதி வழங்கியது. அதன் பேரில் ஞாயிற்று க்கிழமை விருப்பாச்சி நங்காஞ்சியாற்றின் கரையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

    விருப்பாச்சி பாரம்பரிய கிராமமாகும். இக்கிராமம் ஒட்டன்சத்திரத்துக்கு இணையாக வளர்ச்சி அடையப் போகிறது. இங்கு அரசு தொழிற்பயிற்சிக் கூடம் போக்குவரத்து பணி மனை ஆகியவை அமைக்க ப்படும். அதேபோல் தலையூற்று அருவி சுற்றுலா தலமாக்கப்படும்.

    பரப்பலாறு அணை தூர்வார அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. 10 தினங்களுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று அணை தூர்வாரப்பட உள்ளது என்றார்.

    அதனைத் தொடர்ந்து பெருமாள் குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அவர் தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொது ப்பணித்துறை செயற்பொறி யாளர் கோபி, உதவி பொறி யாளர் கோகுலகண்ணன், உதவி பொறியாளர் நீதிபதி, மாவட்டக் கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றியக் கவுன்சிலர் சின்னத்தாய் தங்கவேல், தி.மு.க. ஒன்றியச் செய லாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், விருப்பாச்சி ஊராட்சித் தலைவர் மாலதி சந்திரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×