search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தரராஜ பெருமாள்"

    • அழகர்கோவிலில் இன்று தைலக்காப்பு உற்சவ விழா நடந்தது.
    • நூபுர கங்கையில் நீராடி சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா வருடம் தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைலக்காப்பு உற்சவ விழா 24-ந்தேதி தொடங்கியது. அன்று மாலையில் மேஷ லக்க னத்தில் நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கியது.

    நேற்று (25-ந்தேதி) கோவிலில் உள்ள மீட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று 3-ம் நாள் திருவிழாவாக காலை 7.31 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெரு மாள் பல்லக்கில் எழுந்தருளி சகல பரிவாரங்களுடன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் மலைமேல் உள்ள நூபுர கங்கைக்கு புறப்பாடானார்.

    தொடர்ந்து அழகர்மலை, நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் நிறுத்தப்பட்டு விசேஷ பூஜைகள் தீபாரா தனைகள் நடை பெற்றது. பின்னர் அங்கிருந்து புறப் பாடாகி நூபுர கங்கைக்கு காலை 12 மணிக்கு மேல் சென்று ராக்காயி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் தைல காப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பெருமாளுக்கு திருதைலம் சாத்தப்பட்து அங்குள்ள தீர்த்த தொட்டி யில் தீர்த்தவாரி நடைபெற் றது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக கோவிலில் இருந்து மலைக்கு புறப்பட்ட பெருமாளுக்கு வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் மாதவி மண்டபம் உள்ளிட்ட உள் பிரகாரம் முழுவதும் சுமார் 500 கிலோ பழ வகைகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி அண்ணாச்சி, மற்றும் 200 கிலோ வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

    தைலக்காப்பு உற்சவம் முடிவடைந்தவுடன் மாலையில் பெருமாள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிகாரங் களுடன் மலையில் இருந்து கோவிலுக்குள் சென்று போய் இருப்பிடம் சேருகின்றார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய் திருந்தனர். தைலக்காப்பு உற்சவத்தை பக்தர்கள் காணும் வசதிக்காக அழகர் கோவில் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    • சுந்தரராஜ பெருமாளுக்கு இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரையின் வைகை தென்கரை பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா முடிந்த அன்றைய நாளை வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை மாலையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    பின்னர் 6 மணி முதல் 7.10-க்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா வந்து பதினெட்டாம்படி கருப்பண சாமி சன்னதி பெற்று உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடு ஆகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவே கள்ளழகர் பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழிநெடுகிலும் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

    4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்று மாவடியில் கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் பக்தர்கள் வெள்ளத்தில் அன்று இரவு கள்ளழகர் தல்லாக்குளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தடைகிறார்.

    5-ந் தேதி அதிகாலை தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    • 4 பிராட்டிமார்களை மணந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • நாளை (6-ந்தேதி) மஞ்சள் நீர் சாற்று முறை நடக்கிறது.

    மதுரை

    தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    தினமும் காலை, மாலையில் சுந்தரராஜ பெருமாள் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (5-ந் தேதி) காலை விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி பல வண்ண மலர்கள் மற்றும் விளக்கு களால் கோவில் திருக் கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை 9 மணி அளிவில் மணமேடையில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தர வல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் மணமேடைக்கு வந்தனர். தொடர்ந்து பட்டாச்சா ரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெரி யாழ்வார் முன்னிலையில் திருமணம் விமரிசையாக நடந்தது.

    அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். திருமணத்தை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முன்புறம் உள்ள 2 மண்டபங்களில் விருந்து நடைபெற்றது. இதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண விருந்து சாப்பிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.இன்று இரவு சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி காட்சிய ளிக்கிறார். நாளை (6-ந்தேதி) மஞ்சள் நீர் சாற்று முறை நடக்கிறது.

    ×