search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் அருகே"

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் இருந்த ராசையாவை காணவில்லை.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா (வயது 68), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 5 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி மேரிலதா தனது மகளுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த ராசையாவை காணவில்லை.

    உடனே உள்ளே சென்று தேடிப்பார்க்கும்போது வீட்டின் குளியலறையில் மண்எண்ணை உடலில் ஊற்றி தீ வைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ராசையாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராசையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேரிலதா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்து சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×