search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்கும் பணிகள்"

    • ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி பெருந் திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் சிம்மன், காமதேனு, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவில் நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. மாயூரநாதரும், அஞ்சல்நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

    இதை யொட்டி ராஜபாளையம்-மதுரை சாலையில் பெத்தவ நல்லூர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேகவருமான ராமராஜ் மற்றும் சங்கத்தினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். சீரமைக்கும் பணியில் தேர் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

    • பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
    • ரூ.79.40 லட்சத்தில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரூ.79.40 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

    சமத்துவபுரத்தல் உள்ள வீடுகள், பூங்கா, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை சேதமடைந்த நிலையில் இருந்தன. எனவே வீடுகள் உட்பட சமத்துவபுர வளாகம் முழுவதையும் சீரமைத்து தர வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சமத்துவ புரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.79.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுது.

    இந்த நிதியில் சமத்துவபு ரத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா மேம்பாடு மற்றும் சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவறறின் கட்டிடங்களில் உள்ள சேதங்களைச் சீரைமைத்தல், வீடுகள் உள்ள பழுழக ளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் தீவிராக மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. 

    ×