search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீசன்"

    • குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இதன் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

    இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி'மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர்.

    குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    இதனால் இப்பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக குளச்சல் அருகே கோடிமுனை கிராமத்தில் ஒரு சில மீனவர்கள் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சிப்பி மீன் குறைவாகவே கிடைத்தது.நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். 100 சிப்பி மீன் ரூ.1000-க்கு விலை போனது. கடந்த 3 வருடமாக சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.தற்போது கோடிமுனை, இனயம் கிராமங்களில் மட்டும் சிப்பி எடுக்கும் தொழில் நடக்கிறது. பிற கிராமங்களில் சிப்பி எடுக்கும் தொழிலை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாகி உள்ளதால் கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
    • இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

    சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும்.

    மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

    இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.

    இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த "ஹிமாலய கிரிபன் கழுகு" மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.

    தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.

    இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.

    இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன.

    கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1 லட்சம் பறவைகளுக்கு மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை 1 லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்துள்ளன.

    இதுகுறித்து கோடியக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறியதாவது:-

    கோடியக்கரை பறவைகள் சரணலாயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை சுற்றுலா பயணிகள் காணலாம்.

    சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது என்றார்.

    • காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
    • பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். நுண்ணீர் பாசனம், குழித்தட்டு நடவு முறை, மல்ஷிங் சீட் உட்பட தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விவசாயிகள் இம்முறைகளுக்கு மாறி வருகின்றனர். இதே போல் ஆண்டு முழுவதும் சீரான காய்கறி உற்பத்திக்கு 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

    திறந்தவெளி தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யும் போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான காலநிலை காரணிகளான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், தண்ணீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை, பயிருக்கு ஏற்ப கட்டுபடுத்த முடியாது.ஆனால் 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பத்தில் குடில் அமைத்து உட்பகுதியில் பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம். இதனால் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்பம் நிலவும் பகுதிகளிலும் சீராக காய்கறி உற்பத்தி மேற்கொள்ள முடியும்.மலர் வகைகளில் கிளாடியோலஸ், கார்னேசன், சாமந்தி, சம்பங்கி, டாலியா, ஜெர்பிரா, ஆந்தூரியம், அரளி, ஆர்க்கிட் ஆகிய ரகங்களை ஆண்டு முழுவதும் இத்தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய முடியும்.வெள்ளரி, குடைமிளகாய், கொடித்தக்காளி, கத்தரி, பாலக்கீரை மற்றும் இதர வகை அலங்கார மலர்கள் உற்பத்தியும், பாலிஹவுஸ் எனப்படும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் கூறுகையில், குறைந்த சாகுபடி பரப்பு உள்ளவர்களுக்கு மானியத்தில் பாலிஹவுஸ் அமைத்து கொடுத்தால் அனைத்து சீசனிலும், காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபடலாம்.முன்பு இத்திட்டம் குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் பாலிஹவுஸ் மானியத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம்
    • பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களை கட்ட தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் படகுகளில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்ட நிலையில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நிலையில் அவர்களது படகில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்டிருந்தது. இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×