search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிகள் பாலியல் தொல்லை"

    ராமாபுரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
    போரூர்:

    ராமாபுரம் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். அருகில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கையான 2 சிறுமிகள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடி கொண்டிருந்தனர்

    அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி மணிகண்டனிடம் தட்டிக் கேட்டனர். அவர் சிறுமிகளின் பெற்றோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருவண்ணாமலை தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மேலும் ஒருபெண்ணை போலீசார் கைது செய்தனர். #Orphanage #GirlsHarassment #POCSOAct
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 17-ந் தேதி கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கிருந்த குழந்தைகள், பெரும்பாக்கம் சாலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

    பின்னர் அங்கிருந்த சில சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தனியார் காப்பகத்தின் நிர்வாகிகளான திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த லூபன்குமார் (வயது 65), அவரது மனைவி மெர்சிராணி (55), மெர்சிராணியின் சகோதரர் மணவாளன் (60) ஆகியோர் சில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலை செய்ய வைத்து தகாத வார்த்தையால் பேசியது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூபன்குமார், மெர்சிராணி, மணவாளன் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் இதற்கு உடந்தையாக இருந்து மணவாளனின் மனைவி ஜான்சிராணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். #Orphanage #GirlsHarassment #POCSOAct

    திருமுல்லைவாயலில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதன் உரிமையாளர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
    ஆவடி:

    சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7-வது தெருவில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சுமார் 29 சிறுவர், சிறுமிகள் பல இடங்களில் இருந்து இங்குவந்து தங்கியிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்துகொண்ட அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளிடம் காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து மாஜிஸ்திரேட்டுகள் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீசாருக்கு உத்தரவிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு அந்த காப்பகத்துக்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் காப்பக ஊழியர்கள் பாஸ்கர், முத்து, உரிமையாளர் விமலா ஜேக்கப் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் அனைவரையும் ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
    ×