search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தையை பிடிக்க"

    • சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.
    • வனத்துறையினர் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள அட்டவனை அனுமன்ப ள்ளி ஊராட்சியில் அறச்ச லூர் மலையை ஒட்டி அமை ந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் சண்முக

    சுந்தரம் என்பவரது தொழுவத்தி லிருந்த கன்றுக்குட்டியை இரவில் வந்த மர்மவிலங்கு இழுத்துசென்றது.

    இதனை அடுத்து வெள்ளி வலசில் மற்றொரு விவசா யியின் ஆட்டுப்பட்டியிலிருந்த ஆடு ஒன்றை இழுத்து சென்றுள்ளது.

    இதனால் இச்சம்ப வங்களில் தொடர்பு டைய விலங்கை பிடிக்க வனத்துறையினர் வனப்ப குதியில் கண்கா ணிப்பு கேமராக்க ளை பொருத்தியும், கூ ண்டுகளை வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அறச்சலூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் சாவடி க்காடு பகுதியில் சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.

    இதனை கேள்விப்பட்ட வனத்துறையினர் அங்கு சென்று வனப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் வெள்ளிவலசை சேர்ந்த மக்களும் தேடினர்.

    • சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.
    • சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே யுள்ள கொங்கர்பாளையம் அடுத்த வெள்ளக்கரடு பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்து கொன்றது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வன த்துறைனியர் சிறுத்தையை கண்காணிக்க 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சார்பில் கால்நடைகளை வேட்டை யாடி வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழை க்கப்பட்டு உள்ளே இறைச்சி யும் வைக்கப்பட்டு தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்ற னர்.

    ×