search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
    X

    கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

    • சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.
    • சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே யுள்ள கொங்கர்பாளையம் அடுத்த வெள்ளக்கரடு பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்து கொன்றது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வன த்துறைனியர் சிறுத்தையை கண்காணிக்க 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சார்பில் கால்நடைகளை வேட்டை யாடி வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழை க்கப்பட்டு உள்ளே இறைச்சி யும் வைக்கப்பட்டு தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்ற னர்.

    Next Story
    ×