search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிப்காட் தொழிற்பூங்கா"

    • 1,213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
    • தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் 1213.43 ஏக்கரில் தொழில் பேட்டை அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

    அப்பூங்காவில் 351.89 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் மூலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரும் தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதில் 201 ஏக்கர் நிலபரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.

    அந்தசிறப்பு பொருளாதார மண்டலத்தில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு கொள்கை ஒதுக்கீட்டு ஆணைப்படி நில ஒதுக்கீடு ஆணைப்படி வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி,ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம். ராணி ப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபி ரகாஷ். நெமிலி வட்டாட்சியர் பாலசுந்தர், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, நெமிலி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது.
    • எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2700 ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது. அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த நிலைப்பாட்டை தமிழகத்தின் பிற பகுதிகளில் கடைபிடிக்க தமிழக அரசு மறுப்பது தவறு. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட சிப்காட் அமையவிருக்கும் 100 அடி சாலையில் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-44லிருந்து 1.35 கி.மீ. தூரமுள்ள சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி பெற ITCOT நிறுவனத்தின் மூலம் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளை அமைக்க பல முன்னணி நிறுவனங்கள் பார்வையிட்டு தேவையான நிலங்களை ஒதுக்க சிப்காட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் OLA Electric Mobility Pvt. Ltd. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பெரியண்ணன், சிவப்பிரகா சம், வட்டாட்சியர்கள் வெங்கடே ஷ்வரன் (சிப்காட்), ஆறுமுகம் (நல்லம்பள்ளி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    ×