search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chipcot Industrial Park"

    • 1,213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
    • தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் 1213.43 ஏக்கரில் தொழில் பேட்டை அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

    அப்பூங்காவில் 351.89 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் மூலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரும் தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதில் 201 ஏக்கர் நிலபரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.

    அந்தசிறப்பு பொருளாதார மண்டலத்தில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு கொள்கை ஒதுக்கீட்டு ஆணைப்படி நில ஒதுக்கீடு ஆணைப்படி வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி,ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம். ராணி ப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபி ரகாஷ். நெமிலி வட்டாட்சியர் பாலசுந்தர், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, நெமிலி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×