search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்கோ"

    • கப்பலூர் சிட்கோ பகுதியில் குப்பைகளை சரிவர அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில்

    500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிட்கோ இதுவாகும்.

    கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    இங்கு பஞ்சுக்கழிவுகள், துணிமூடைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் உள்ளிட்டவை ேசர்ந்து காணப்படுகின்றன.

    இது குறித்து சிட்கோவில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசன் கூறுகையில், கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் பஞ்சாயத்தாக உச்சப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவைப் பொறுத்தவரை பராமுகமாக இருந்து வருகிறது. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.

    இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில்அதிபர் சங்கத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. குப்பைகள் அதிகமாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், மின்கட்டணம் செலுத்துதல், மாசுபரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை அள்ள வருவதில்லை. சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர்.

    இது சம்பந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கிதருவாக கூறியுள்ளார் என்றார்.

    வெள்ளலூர் பகுதியில் சிட்கோ அமைக்க 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதனை தலைமையிடமாகக் கொண்டு 66 கிராமங்கள் உள்ளன. இதனால் இதனை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் வந்து துணை தாசில்தார் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. வெள்ளலூரை சேர்ந்த 66 கிராம மக்கள் இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் மற்றும் வல்லடிகாரர் கோவில் திருவிழாக்கள் ெதாடங்குவதற்கு முன்பு சாமி கும்பிடுவது வழக்கம். அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை பகுதியில் மான், மயில்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. 

    இந்த மலையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மலையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை வைத்து விவசாய பணிகள் நடந்து வருகிறது. 

    மேலும் இங்கே கால்நடை மேய்ச்சல் பகுதியும் உள்ளது. இங்கே சிட்கோ அமைத்தால் 66 கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் வன விலங்குகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். எனவே சிட்கோவை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×