என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிகிச்சை பலனின்றி இறந்தார்"
- முன்னால் சென்று கொண்டிருந்தது திடீரென பின்னோக்கி வந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ஸ்.
இவரது மகன் கனகராஜ் (வயது 16). இவர் இன்று காலை கிருஷ்ணகிரி-வாணிய ம்பாடி நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்தது.
இதனை கனகராஜ் கவனிக்காததால் பைக் மீது டிராக்டர் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.
- போலீஸ் விசாரணை
சோளிங்கர் :
அரக்கோணம் அடுத்த சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர் கடந்த 19-ந் தேதி சின்னகைனூரிலிருந்து சோளிங்கர் நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
சோளிங்கர் அடுத்த கூடலூர் சமத்துவபுரம் அருகே வரும்போது நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.
அதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்ட பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்