search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு
    X

    பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு

    • முன்னால் சென்று கொண்டிருந்தது திடீரென பின்னோக்கி வந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ஸ்.

    இவரது மகன் கனகராஜ் (வயது 16). இவர் இன்று காலை கிருஷ்ணகிரி-வாணிய ம்பாடி நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்தது.

    இதனை கனகராஜ் கவனிக்காததால் பைக் மீது டிராக்டர் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×