search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து தவறி விழுந்து ஊழியர் சாவு
    X

    பைக்கில் இருந்து தவறி விழுந்து ஊழியர் சாவு

    • நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.
    • போலீஸ் விசாரணை

    சோளிங்கர் :

    அரக்கோணம் அடுத்த சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    இவர் கடந்த 19-ந் தேதி சின்னகைனூரிலிருந்து சோளிங்கர் நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

    சோளிங்கர் அடுத்த கூடலூர் சமத்துவபுரம் அருகே வரும்போது நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.

    அதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்ட பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×