search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி. கடையின்"

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
    • சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெயக்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

    இதையடுத்து இந்த பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×