search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டை உடைத்து திருட்டு"

    • கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோபி:

    கோபி அடுத்த ஆண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவர் மோடூர்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு மோகன்ராஜ் சென்றுவிட்டார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.2000 பணம் மற்றும் 20 பீடிக்கட்டுகள் திருட்டு போய் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் மோகன்ராஜ் கடையில் புகுந்த மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளை நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில் காமராஜபுரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இன்று அதிகாலை சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29). என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48). கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
    • சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெயக்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

    இதையடுத்து இந்த பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (36). இவர் பவானி-ஈரோடு மெயின் ரோடு காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் சொந்தமாக மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த பீடி, சிகரெட், சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் சுடலை புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் நடைபெற்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சித்தோட்டில் மின் பொறியாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற பரபரப்பு அடங்கும் முன் காளிங்கராயன பாளையத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகள் பதிவு கொண்டு குற்றவாளிகள் யார் என விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • சிவராமன் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் மெட்ராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சம்பவத்தன்று சிவராமன் தனது சொந்த ஊரான குள்ளஞ்சாவடி அருகே அணுக்கம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று அவரது வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவராமன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×