search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில்கள் திருடிய வாலிபர்
    X

    மது பாட்டில்கள் திருடிய வாலிபர்

    • டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில் காமராஜபுரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இன்று அதிகாலை சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29). என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48). கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×