மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

கோபி:

கோபி அடுத்த ஆண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவர் மோடூர்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு மோகன்ராஜ் சென்றுவிட்டார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.2000 பணம் மற்றும் 20 பீடிக்கட்டுகள் திருட்டு போய் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் மோகன்ராஜ் கடையில் புகுந்த மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளை நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com