search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burglary of a"

    • கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோபி:

    கோபி அடுத்த ஆண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவர் மோடூர்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு மோகன்ராஜ் சென்றுவிட்டார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.2000 பணம் மற்றும் 20 பீடிக்கட்டுகள் திருட்டு போய் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் மோகன்ராஜ் கடையில் புகுந்த மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளை நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (36). இவர் பவானி-ஈரோடு மெயின் ரோடு காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் சொந்தமாக மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த பீடி, சிகரெட், சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் சுடலை புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் நடைபெற்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சித்தோட்டில் மின் பொறியாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற பரபரப்பு அடங்கும் முன் காளிங்கராயன பாளையத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகள் பதிவு கொண்டு குற்றவாளிகள் யார் என விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×