search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை தடுப்புகளை"

    • அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலைக்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடை பெற்று வருகிறது. இதில் சக்தி ரோடு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வரை 2 இடத்தில் மட்டுமே சாலையை கடக்கும் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி தியேட்டர் சாலையில் திரும்புவதற்கான வழி இல்லை.

    இதனால் வாகனங்கள் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்ப டுவதாக கூறி வீரப்பன்சத்திரம் அனைத்து வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பாரதி திரையரங்கு சாலை சந்திப்பில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 5-ந் தேதி கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் பகுதி வியாபாரிகள் கூறியதா வது:-

    சாலை தடுப்பு வைத்துள்ளதால் தற்போது இருசக்கர வாகனங்கள் ஒரு வழிபாதையில் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    உயிரிழ ப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை தடுப்பால் வியா பாரம் முற்றிலும் பாதிக்கப்ப டுகிறது.

    மற்ற சாலைகளில் பல இடங்களில் சாலைகளில் இடைவெளி இருந்தும் இந்த சாலையில் மட்டும் தடுப்புகளை அகற்ற பிடிவாதம் பிடிப்பதன் காரணம் புரியவில்லை.

    இதனால் வியாபாரி களையும், பொது மக்களையும் பாதுகாக்க இந்த பகுதியில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×