search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை கால்வாயில்"

    • வெண்டிபாளையம்ரெயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாயில் பிளீச்சிங் கழிவுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறி வருகிறது
    • இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோலார் அடுத்த வெண்டிபாளையம் ெரயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் செல்லும் கழிவுநீர் நேரிடையாக காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் வெண்டிபாளையம் மற்றும் மோளக் கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நாள்தோறும் வெள்ளை நிறத்தில் கால்வாய்களில் பாய்ந்தோடி வருகிறது.

    இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பிளீச்சிங் தண்ணீர் வெள்ளையாக பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நின்று மூக்கை பொத்தி பிளீச்சிங் கழிவு நீரை வேடிக்கை பார்த்து செய்வதறியாது திகைத்து செல்கின்றனர்.

    வெள்ளை நிறத்தில் பிளீச்சிங் கழிவுநீர் வெளியேறுவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பல நாட்களாக பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பிளீச்சிங் கழிவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    பிளீச்சிங் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டுபிடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதியில் போராட்டம் நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அத்தாணி ரோடு பகுதியில் பொரிக் கடை எதிரே கெட்டி விநாயகர் கோவில் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ேராட்டின் குறுக்கே கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.

    அந்த பணி தற்போது நிறைவு பெற்று அந்த 2 பகுதிகளிலும் திட்டுகள் அமைக்கப்பட்டது.

    ஆனால் கழிவுநீர் செல்லக்கூடிய சாலை வரை அந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டும் இல்லை யென்றால் பேரிகேட் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பக்க வாட்டில் நிலை தடுமாறி அந்த பெரிய கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வர வில்லை.

    இதனால் அவரை மேலே தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லாமல் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே மேலே ஏறி சாலையில் சென்றவர்களை அழைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீர் வடிகாலில் இருந்த இருசக்கர வாகனத்தை மேலே தூக்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்து வீடு திரும்பி னார் என்பது குறிப்பி டத்தக்கது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க நெடுஞ் சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×