search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவ ஊர்வலம்"

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலராமன் என்பவருடைய மனைவி ராஜாமணி இவர் கடந்த மாதம் 26-ந் தேதி இறந்து விட்டார்.

    சவ ஊர்வலத்தின் போது உடன் வந்தவர்கள் பட்டாசுகளை ெவடித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறி உள்ளது. அதன் தீப்பொறி வாகனத்தில் விழுந்து அதிலிருந்த பட்டாசுகளை வெடித்து சிதறின.

    அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (27) ஆகிய இருவர் மீதும் பட்டாசு விழுந்து வெடித்ததில் பலத்த காயம் அடைந்தனர்.

    இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த டில்லி பாபு நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். சவ ஊர்வலத்தில் பட்டாசு வீசிய சம்பவத்தில் காயமடைந்த இருவரும் இறந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்து போன டில்லிபாபுக்கு ரம்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தையும் உள்ளது தற்போது ரம்யா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
    • 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ஆடிக்கொண்டு சென்றார்கள். இதனை அதே பகுதியை சேர்ந்த மணிவர்மன் என்பவர் தட்டி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    இதனை தட்டிக் கேட்ட உறவினர் பன்னீர் செல்வியை அடித்தனர். மேலும் இதனை பார்த்த மணிவர்மன் அண்ணன் அன்பு நேசமணியினை இந்த கும்பல் சரமாரியாக தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த மணிவர்மன் மற்றும் பன்னீர்செல்வி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், திவாகர், மோகன், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×