search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு லாரிகள்"

    • சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
    • போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பெரிய தொழிற்சாலைகளுக்கான ராட்சத எந்திரங்கள் சரக்கு லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.

    அந்த வாகனங்களின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அவை சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.

    எனவே அந்த நேரத்தில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பணியாட்கள் ஈடுபடுவது உண்டு. ஆனால் வனப்பகுதிகளில் சரக்கு லாரி வரும்போது வழியில் உள்ள மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை சேதப்படுத்துகிறது. அவற்றை லாரி டிரைவர்கள் சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் சரக்கு லாரிகள் பெரும்பாலும் மாலைநேரத்தில் வந்து செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு இதற்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • பிரேக் அறுந்ததால் விபத்து
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.காலை முதல் இரவு வரை சரக்கு லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இரவு முதல் அதிகாலை வரை லாரிகளில் சரக்குகள் கொண்டு வந்து இறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலையில் லாரி ஒன்று கோட்டார் பஜாருக்கு சரக்கு களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டி ருந்தது.சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் லாரி வந்து கொண்டி ருந்தபோது திடீரென பிரேக் ஒயர் அறுந்ததாக தெரிகிறது.இதனால் டிரைவரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச் சைக்காக அங்குள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தினால் மிகப் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காலையில் அல்லது மாலை நேரங்களில் விபத்து நடந்திருந்தால் மிகப்பெரிய விபரிதங்கள் நடந்து இருக் கும். காலை நேரத்தில் நடந்த தால் விபத்தில் சிக்கிய லாரி மட்டுமே சேதம் அடைந்தது.

    ×