search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo lorries"

    • சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
    • போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பெரிய தொழிற்சாலைகளுக்கான ராட்சத எந்திரங்கள் சரக்கு லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.

    அந்த வாகனங்களின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அவை சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.

    எனவே அந்த நேரத்தில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பணியாட்கள் ஈடுபடுவது உண்டு. ஆனால் வனப்பகுதிகளில் சரக்கு லாரி வரும்போது வழியில் உள்ள மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை சேதப்படுத்துகிறது. அவற்றை லாரி டிரைவர்கள் சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் சரக்கு லாரிகள் பெரும்பாலும் மாலைநேரத்தில் வந்து செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு இதற்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    வந்தவாசி அருகே 300 டன் விஷ்ணு சிலை பெங்களூர் கொண்டு செல்வதற்காக 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர்.
    வந்தவாசி:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீகோதண்டராம சாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

    இந்தக் கோவிலில் ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர, 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், சாமி சிலை, ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கோவில் அறக்கட்டளை சார்பில், கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

    சாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட கல்லும் நவீன இயந்திரங்கள் மூலம் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டது.

    கடந்த 2016ம் ஆண்டு சாமி சிலை செய்வதற்காக தோண்டி வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் மட்டும் பெருமாளின் நடுமுகம், சங்கு, சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டன.

    மீதமுள்ள முகங்கள், கைகளை செதுக்கும் பணிகள் கற்பாறைகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தொடங்கும் என தெரிவித்தனர்.

    இந்த 2 கற்களும் இரண்டு தனித்தனி கார்கோ லாரிகளில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். 160 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சாமி சிலை செய்வதற்கான கல்லும், 96 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஆதிசே‌ஷன் சிலை செய்வதற்கான கல்லும் எடுத்துச் செல்ல பணிகள் நடந்தது.

    சாமி சிலை செய்வதற்கான கல் சுமார் 380 டன் எடை கொண்டதாக இருந்தது. இதனால் சாமி சிலையை லாரியில் ஏற்ற முடியவில்லை.

    இதனையடுத்து சாமி சிலையின் எடையை குறைக்க முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்தது. சாமி சிலையின் சுற்று பகுதியில் 80 டன் எடை குறைக்கப்பட்டது. தற்போது சிலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

    சாமி சிலை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.

    இதனை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று சாமி சிலை கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஈரப்பதம் காணப்படுகிறது.

    இதனால் கொரக்கோட்டை மலை பகுதியில் இருந்து சாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. லாரி செல்ல வழி ஏற்படுத்தி வருகின்றனர். பிரமாண்ட சிலை லாரியில் ஏற்றப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
    கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் செல்ல முடியாமல் சரக்கு லாரிகள் தமிழக எல்லையில் காத்து நிற்கின்றனர்.
    பொள்ளாச்சி:

    கனமழை தொடர்வதால் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை.

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கேரள மாநிலத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வழியாக திருச்சூர் உள்ளிட்ட கேரளாவின் பிற மாவட்டங்களுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பொள்ளாச்சி பகுதியில் இருந்து காய்கறி, மஞ்சி, தேங்காய் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை நடுப்புணி, கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட எல்லை பகுதி சோதனை சாவடியிலே கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

    இதனால் லாரிகள் ரோட்டின் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. டிரைவர்கள், கிளீனர்கள் அவதியடைந்துள்ளனர். அவர்கள் லாரிகளில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். பாலக்காடு வழியாக தலச்சேரி, காசர் கோடு, கண்ணூர் செல்லும் லாரிகள் மட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 10 லாரிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கேரள மற்றும் தமிழக எல்லையில் கோபாலபுரம் அருகே உள்ள முலத்தரா தடுப்பணை வழியாக கேரளாவுக்கு செல்கிறது.

    இந்த தடுப்பணையின் தடுப்பு சுவர் கடந்த 9-ந் தேதியன்று உடைந்தது. இந்த நிலையில் தற்போது ஆழியாறில் இருந்து அதிக பட்சமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆழியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க முடியாக மூலத்தரா தடுப்பு அணையின் இரு பக்கத்திலும் நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அணையில் ஆங்காங்கே தண்ணீரை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கான்கிரீட் சுவர்கள் அடித்து செல்லப்பட்டது.

    பொள்ளாச்சியில் இன்று காலையும் மழை பெய்தது. #tamilnews
    ×