search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்கள் கோரிக்கை"

    • சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 2 மரங்களை வெட்ட முற்படும்போது இது பற்றி தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், அவற்றை தடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்.

    பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இயற்கை தந்த உன்னதமாகவும், மனித வாழ்க்கையில் அங்கமாகவும் விளங்கும் பனை மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பனை மரங்களை வெட்ட தடை செய்ய கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்தது.

    அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.

    இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் பனை மரங்கள் வெட்டப்படுவது சகஜமாக நிலவி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெட்டப்படும் பனை மரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை இது போன்ற செயலில் ஈடுபடுத்துவது குற்றமாகும்.
    • மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தருமபுரி,

    தமிழக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் சார்பாக ரூ.310 கோடி மதிப்பில் தருமபுரி- அரூர் இரு வழி பாதையும், மற்றும் ரூ.96.50 கோடி திருவண்ணாமலை- அரூர் வரை இருவழி பாதையை 4 வழி பாதையாக மொத்தம் ரூ. 410 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு பணிகளை கடந்தாண்டு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் பொது பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஒப்பந்ததார்கள் மூலம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாடு முழுவதும் மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கான ஊதியமும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

    அதற்கு மாறாக தருமபுரியில் இருந்து அரூர் வரை நடைபெற்று வரும் சாலை பணிகள் மே தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்காமல் ஒப்பந்ததார் தொழிலாளர்களை சாலை போடும் பணிகளை அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை இது போன்ற செயலில் ஈடுபடுத்துவது குற்றமாகும். ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒப்பந்ததார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக அரசு அதியமான் கோட்டம் அமைத்து பராமரித்து வருகிறது.
    • அரசு விழா எடுக்க வேண்டும் என பொதுமக்கள் . சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் சங்ககால தமிழ் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி பெருமையை அடுத்த தலைமுறைக்கு சேர்க்கும் வகையில் தமிழக அரசு அதியமான் கோட்டம் அமைத்து பராமரித்து வருகிறது.இதை தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் பார்த்து சென்று வருகின்றனர்.

    மேலும் தமிழ் சமூகத்தின் பெருமையை காலத்திற்கு சொல்லும் வகையில் ,தமிழக அரசு அரசு விழாவாக எடுத்து நடத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

    பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்பகுதியிலும், 13-ம் நூற்றாண்டு தொடக்கப்பகுதியிலும் தருமபுரி தகடூர் நாட்டை ஆட்சி செய்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி.இவர் இப்பகுதியை ஆண்ட ராசராச அதிகமானின் மகன்.

    தமிழ் மன்னர்களான சேரர் ,சோழர், பாண்டியர் போன்ற மன்னர்களுக்கு இணையாக தமிழ் சமூகம் பெருமைப்படும் வகையில் உலகிற்கு பறைசாற்றியவர் மன்னன் அதியமான்.

    அதியமான் நெடுமான் அஞ்சி வீரம் மிக்கவராகவும், சேர, சோழ, பாண்டியர், கடையேழு வள்ளல்களான பாரி, பேகன், ஆய், காரி, ஓரி, நல்லி என பல்வேறு மன்னர்களுடன் போரிட்டுள்ளார்

    போர்க்களத்தில் சேரன், சோழன், பாண்டியன், திதியன்,எருமை யூரன், இளங்கோ வேண்மான், பொரு நன் என்ற 7 அரசர்களையும் போரில் வென்றது தமிழினத்தின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இருந்துள்ளது.

    சங்க பாடல்களில் தமிழ் அவ்வை பாட்டி மொத்தம் 59 பாடல்கள் பாடியுள்ளார், அதில் அதியமான் குறித்து பாடிய பாடல்களே அதிகமாக உள்ளது. நீண்ட நாள் உயிர் காக்கும் தன்மை கொண்ட அரிய வகை நெல்லிக்கனியை தான் உண்ணாமல் அவ்வைக்கு வழங்கியதாக அவ்வையாரே பதிவு செய்துள்ளார்.

    தகடூர் கல்வெட்டு என்னும் நூல் அதியமான் மன்னர்களின் பெருமையை விவரிக்கிறது.

    சங்க கால இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து , சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதியமான் அஞ்சியின் முன்னோர்கள் முதல் முதலாக கரும்பு பயிரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து பயிரிட்டனர் என என குறிப்புக்கள் உள்ளன.

    எனவே தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் மன்னர் அதியமான் குறித்து அடுத்த தலைமுறைக்கு தகவல் சேர்க்கும் வகையிலும் நட்பு. வீரம், தமிழ் பற்று போன்றவற்றில் சிறந்து விளங்கிய தருமபுரி மண்ணுக்கு பெறுமை சேர்க்கும் மன்னர் கொடை வள்ளல் அதியமானுக்கு அரசு விழா எடுக்க வேண்டும் என பொதுமக்கள் . சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
    • போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் 42 ஊராட்சிகள், 417 கிராமங்கள் கொண்ட வளர்ந்து வரும் பெரிய நகரம் ஆகும்.

    இந்த ஊராட்சியில் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகள், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், தொழில்சாலைகள், பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சூளகிரி பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.இதனால் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    சூளகிரிபேருந்து நிலை யத்தில் இருந்து ஓசூருக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்கிறார்கள். இந்த பஸ்நிலையத்திற்கு காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல ஏராளமான மாணவ, மாணவிகள் வருகிறார்கள்.

    அப்போது அந்த மாணவி களிடம் இளைஞர்கள் சிலர் வம்பு செய்கிறார்கள். இதனால் சூளகிரி பஸ்நிலை யத்தில்பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    மேலும் முக்கிய சாலை களில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால் மாணவ, மாணவி களின் கல்வி பாழாகும் நிலை உருவாகிறது.

    சூளகிரி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

    ×