search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனீஸ்வர பகவான்"

    • சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

    2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

    3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.

    4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

    5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.

    7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

    8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.

    • வாணி தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது.
    • கங்கா தீர்த்தம் சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது.

    *பிரம்ம தீர்த்தம்: இது பிரம்மாவால் ஏற்பட்டது. இது இறைவனின் ஆலயத்திற்குக் கிழக்கே உள்ளது. மார்கழி மாதம் அதிகாலையில் இதில் நீராடி இறைவனை வழிபட்டு வர காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும்.

    *வாணி தீர்த்தம்: இத்தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது. இதில் 48 நாட்கள் மூழ்கி இறைவனை வழிபட்டால் கலைகளில் வல்லமை உண்டாகும்.

    *அன்ன தீர்த்தம்: இது அன்னத்தால் உண்டாக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி அகழியாய் ஓம் என்னும் எழுத்துப் போல இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மூழ்கினால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.

    *நள தீர்த்தம்: இது நளனால் உண்டாக்கப்பட்டது. இது கோவிலின் வடக்குப் பக்கம் உள்ள குளம் ஆகும். இதில் எண்ணெய்த் தேய்த்துக் குளித்து இறைவனை வழிபட்டால் சனிபகவான் தோஷம் நீங்கும். இதில் நவக்கிரகங்களுக்கும் தனித்தனிக் கிணறுகள் உள்ளன.

    * கங்கா தீர்த்தம்: இது சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது. இதனைக் கண்ணால் கண்டாலே பாவங்கள் தொலையுமாம். இது நள தீர்த்தக் கரை, நள விநாயகர் ஆலயத்துள் உள்ள கிணறு ஆகும். கங்கா கூபம் என்று இதனைக் கூறுவர். நளகூபம் என்றும் கூறுவர். அமாவாசை, பவுர்ணமி நாள்களில் இத்தீர்த்தத்தால் இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்வர்.

    * அட்டத்திக்குப் பாலகர் தீர்த்தங்கள்: இந்திரன் முதலான அட்டதிக்குப் பாலகர்களும் தங்கள் தங்கள் திக்குகளில் தங்கள் பெயரில் எட்டுத் தீர்த்தங்கள் உண்டாக்கி, தீர்த்தக் கரைகளில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளனர். இவை கோவிலைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அமைந்துள்ளன. இவற்றில் தீர்த்தமாடினால் சிவபதம் கிடைக்கும் என்று இதன் மகிமை கூறப்படுகிறது.

    * அகஸ்தியர் தீர்த்தம்: அகஸ்த்தியரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம். கோவிலின் வடக்கில் உள்ளது.

    * அம்ஸ தீர்த்தம்: அனைத்துத் தேவர்களும் ஒன்றுகூடி ஏற்படுத்திய தீர்த்தம் இது.

    • ருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.
    • பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    திருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன. இதுபற்றி ஆலய குருக்கள் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கூறியதாவது:

    1. முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும். புனித நீராடி முடித்ததும், துணிகளை நளதீர்த்தத்தில் எக்காரணம் கொண்டு போடக்கூடாது. தீர்த்தத்துக்கு வெளியில் கரையில்தான் போட வேண்டும்.

    2. நள தீர்த்தத்தில் நீராடி முடித்ததும் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

    3. பின்னர் ஆலயத்துக்கு வந்து மூலவரான தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிகளை வழிபட வேண்டும்.

    4. இதையடுத்து கோவிலை வலம்வந்து வழிபட வேண்டும்.

    5. பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    6. இறுதியில் அருகில் உள்ள பிரணாம்பிகா அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும்.

    7. வெளியில் வந்து கொடிமரம் அருகில் விழுந்து வணங்க வேண்டும்.

    8. ஆலயத்தின் வெளி பிரகாரத்தில் திலதீபம் ஏற்ற வேண்டும்.

    9. முடிவில் ஆலயத்தில் சிறிதுநேரம் அமர்ந்து செல்ல வேண்டும்.

    10. இயன்ற தானதர்மங்கள் செய்வது மிகவும் நல்லது.

    • இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
    • இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்

    இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.

    இவனுக்கு நீலா, மந்தா என இரு மனைவியர் உண்டு என நூல்கள் கூறுகின்றன.

    எமனால் தண்டிக்கப்பட்டு சனியினுடைய வலக்கால் ஊனமாயிற்று என்றும், தட்சயாகத்தினால் ஒரு கண் போயிற்று என்றும் வரலாறு கூறுகிறது.

    இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்

    சனி வழிபட்ட சிவாலயங்கள்:

    நெல்லிக்கா,

    கொள்ளிக்காடு,

    திருநள்ளாறு

    ×