search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரதங்கள்"

    • சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

    2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

    3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.

    4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

    5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.

    7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

    8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.

    • கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
    • செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் நல்ல பலன்களை தரும்.

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.

    செவ்வாய்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும்.

    மேலும் செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், செவ்வாய்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.

    அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார்.

    செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைபிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    • விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.
    • விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.

    அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.

    வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும்

    விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.

    விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    வீட்டிலேயே பூஜை செய்ய விருப்பமுள்ளவர்கள் பூஜை அறையில் சாணம், சந்தனம், வெல்லம், மஞ்சள், புற்று மண்

    இவற்றில் ஏதேனும் ஒன்றில் விநாயகர் திருவுருவைப் பிடித்து வைத்துப் பூஜை செய்யலாம்.

    இவ்வுருவங்கள் பூஜை முடித்த பின்னால் நீரில் விடுதல் வேண்டும்.

    • குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.
    • வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

    வாரத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம்.

    ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது.

    சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

    ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம்.

    பகலில் ஒரு வேளை உணவருந்திவிட்டு இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

    திங்கள்

    திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும்.

    சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும்.

    ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து,

    தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய்

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

    புதன்

    புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும்.

    விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.

    வியாழன்

    குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.

    அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும்.

    குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது.

    வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

    கடன் தொல்லை நீங்கும்.

    சனி

    சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்

    ×