search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டங்கள் குறித்து"

    • ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
    • இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

    சத்தியமங்கலம்:

    ரீடு நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து பணி செய்து வருகிறது.

    அதனுடைய தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களுடைய குழந்தை களின் கல்வியை உறுதி செய்யவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

    மேலும் அவர்களுக்கு கையால் மலம் அள்ளும் தடைசட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

    ரீடு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன், சத்தியமங்க லம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, கள ஒருங்கிணைப் பாளர்கள் சரவணக்குமார், சண்முகப்பிரியா, ராஜா மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×