search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைபணியாளர்கள்"

    • டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    திருப்பூர்:

    நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில் தூய்மை பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் பேசியதாவது:-

    அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.

    இதன் நோக்கம் நாட்டின் கடைகோடி மக்களுக்கு அரசின் நிா்வாகத்தை கொண்டு செல்லும் விதமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தீா்வு காணுதல், நல்ல நிா்வாகம் நடைபெற நடைமுறைகளை செயல்படுத்த நாட்டின் குடிமக்களை மையப்படுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதே நமது நோக்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

    முன்னதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை 100 பணியாளா்களுக்கு வழங்கினா்.இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
    • இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

    சத்தியமங்கலம்:

    ரீடு நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து பணி செய்து வருகிறது.

    அதனுடைய தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களுடைய குழந்தை களின் கல்வியை உறுதி செய்யவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

    மேலும் அவர்களுக்கு கையால் மலம் அள்ளும் தடைசட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

    ரீடு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன், சத்தியமங்க லம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, கள ஒருங்கிணைப் பாளர்கள் சரவணக்குமார், சண்முகப்பிரியா, ராஜா மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×