search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஸ்டாரிகா"

    • லிமோன் நகருக்கு வந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.
    • விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

     லிமோன்:

    மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.

    ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமான பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.

    கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டவிரோதம் என்ற நிலையை, மாற்றி அவ்வகை திருமணம் மீதான தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CostaRica
    சான்ஜோஸ்;

    மத்திய அமெரிக்க நாடாக கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்றும் கிரிமினல் குற்றம் என்றும் சட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற அல்வாராடோ ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

    அதன்படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்வகை திருமணத்தின் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. 

    மேலும், 18 மாதங்களில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த தீர்ப்புக்கு அந்நாட்டு பழமைவாதிகள் கட்சியான சுவிஷகர்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

    57 இடங்கள் கொண்ட பாராளுமன்ற சபையில் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டும் இருப்பதால், இந்த சட்டம் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×