search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "same sex marriage"

    • அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
    • ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு திருமண அங்கீகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. திருமண உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது, காப்பீடுகளில் துணைகளின் பெயர்களை சேர்த்தல் போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமண அந்தஸ்து வழங்காமல், அடிப்படை உரிமைகள் தொடர்பான இந்த பிரச்சினைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் புதன்கிழமை பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

    ஓரினச்சேர்க்கை திருமண விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டியது பாராளுமன்றம் தானே தவிர, நீதிமன்றம் அல்ல என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தை அரசாங்கம் மற்றும் நீதித்துறை இடையிலான பிரச்சினையாக மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஓரே பாலின திருமணங்களை கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்ற இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த மேல்முறையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
    • ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிலையான உறவில் கூட இருப்பார்கள் என்பதை அங்கீரித்துள்ளதாக தலைமை நீதிபதி தகவல்

    புதுடெல்லி:

    ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    அதன்படி அரசியல் சாசன அமர்வில் கடந்த 18ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியதாவது:-

    ஒரே பாலின உறவுகளை வெறும் உடல் உறவுகளாக மட்டும் பார்க்காமல், நிலையான உணர்ச்சிபூர்வமான உறவாக பார்க்கிறோம். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க, திருமணம் குறித்த கருத்தை மறுவரையறை செய்ய வேண்டும். திருமணத்திற்கு இரு வேறு பாலினத்தைச் சேர்ந்த துணைவர்கள் அவசியமா?

    1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் இந்தச் சட்டம் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும்போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்தவர்கள் சம்மதத்துடன் கூடிய உறவை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிலையான உறவில் கூட இருப்பார்கள் என்பதையும் அங்கீரித்துள்ளோம்.

    அதேசமயம் நான் ஏற்கனவே கூறியதுபோல் இது முழுமையானது அல்ல. இதுபோன்ற திருமணங்களுக்கு கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் வரும் அபாயமும் உள்ளது. ஒரே பாலின ஜோடியின் குழந்தை சாதாரண சூழ்நிலையில் வளருமா?

    இவ்வாறு தலைமை நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இனி திங்கட்கிழமை தொடர்ந்து வாதம் நடைபெறும்.

    இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    • எல்ஜிபிடிக்யூ+ தம்பதிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.
    • வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    ஆணோடு ஆண் திருமணம், பெண்ணோடு பெண் திருமணம்... என ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், இயற்கைக்கு மாறாக திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை இந்தியாவில் வெறுப்புக்குரியதாக இருந்தபோதிலும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உறவுகள் தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படுகிறது.

    ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என்றும், அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரே பாலின திருமணத்தை நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதை அடிப்படை உரிமையாக மனுதாரர்கள் கோர முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், உடலுறவு கொள்வதும் குற்றமில்லை என்றாலும், இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என்று மத்திய அரசு வாதிட்டது. தற்போதைய சட்ட கட்டமைப்பிற்கு எதிராக எல்ஜிபிடிக்யூ+ தம்பதிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.

    இதையடுத்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பான இறுதிக்கட்ட வாதங்கள் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் எனவும் கூறினர்.

    மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும், இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டவிரோதம் என்ற நிலையை, மாற்றி அவ்வகை திருமணம் மீதான தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CostaRica
    சான்ஜோஸ்;

    மத்திய அமெரிக்க நாடாக கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்றும் கிரிமினல் குற்றம் என்றும் சட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற அல்வாராடோ ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

    அதன்படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்வகை திருமணத்தின் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. 

    மேலும், 18 மாதங்களில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த தீர்ப்புக்கு அந்நாட்டு பழமைவாதிகள் கட்சியான சுவிஷகர்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

    57 இடங்கள் கொண்ட பாராளுமன்ற சபையில் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டும் இருப்பதால், இந்த சட்டம் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×