search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை போலீசார்"

    • இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன.
    • புகார் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கோவை,

    கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தபடி உள்ளது. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது மட்டுமின்றி, பாதிக்கப்ப ட்டவர் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே சைபர் கிரைம் குற்றங்களின் வகைகள், குற்றவாளிகளிடம் இருந்து தப்புவது எப்படி, ஏமாந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடி க்கைகள் ஆகியவை தொடர்பாக மாநகர போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இணையதள குற்றவாளிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர், பாதிக்கப்பட்டோர் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? ஆகியவை குறித்த அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் எளிதில் சிக்கி விடுகின்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்ற வாளிகளை பிடிப்பத ற்காகவே தனிப்படை இயங்கி வருகிறது. எனவே ஆன்லைன் பணமோசடி, ஓ.டி.டி மூலம் பணம் இழந்தவர்கள், கிரெடிட் கார்டு மோசடி, இ-காமர்ஸ் மோசடி மற்றும் பல்வேறு அம்சங்கள் வாயிலாக பணம் இழந்தவர்கள் உடனடியாக கட்டணம் இல்லா தொலைபேசி எண்:1930 மூலம் தொடர்பு கொண்டு புகார் தரலாம். இதுதவிர www.cybercrime.gov.in இணையத்தளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். இணைய த்தளமோசடியில் பணம் இழந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் புகார் கொடுக்கிறா ர்களோ, அந்தளவுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • கோவை மாநகரில் சினிமா பாணியில் ரவுடிகள் கும்பலாக பிரிந்து மோதுவது தொடர் கதையாகி வருகிறது.
    • ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், எதிர் கும்பலை சேர்ந்தவர்களை வெட்டுவதும், பதிலுக்கு அவர்கள் வெட்டுவதும் என மோதல் நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஓட, ஓட விரட்டி சென்றனர்.

    வீட்டிற்குள் சென்று பதுங்கிய சத்தியா பாண்டியை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதேபோல் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் கோவில்பாளையத்தை சேர்ந்த கோகுலை பழிக்குப்பழியாக 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை துணை கமிஷனர் சந்திஷ் தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    கோவை மாநகரில் சினிமா பாணியில் ரவுடிகள் கும்பலாக பிரிந்து மோதுவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், எதிர் கும்பலை சேர்ந்தவர்களை வெட்டுவதும், பதிலுக்கு அவர்கள் வெட்டுவதும் என மோதல் நடந்து வருகிறது.

    குறிப்பாக கண்ணப்ப நகர், மோர் மார்க்கெட், ரத்தினபுரி, சித்தாபுதூர், செல்வபுரம், சரவணம்பட்டி பகுதிகளில் அதிகளவில் ரவுடி கும்பல் உள்ளது.

    இவர்கள் வாகனம் பறிமுதல், கஞ்சா விற்பனை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த தொழில் போட்டியில் தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி மோதி கொள்வார்கள்.

    இதுதவிர ஆங்காங்கே சில கத்திக்குத்து சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களும் நடந்து வருகிறது.

    அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, மக்கள் நிறைந்த இடத்தில் கொலை செய்வது என வன்முறை சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் கோவை மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பகுதி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரித்து வருகிறார்கள்.

    இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, அவர்களை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் அதற்கான பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

    ×