என் மலர்
நீங்கள் தேடியது "Coimbatore police"
- இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன.
- புகார் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கோவை,
கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தபடி உள்ளது. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது மட்டுமின்றி, பாதிக்கப்ப ட்டவர் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே சைபர் கிரைம் குற்றங்களின் வகைகள், குற்றவாளிகளிடம் இருந்து தப்புவது எப்படி, ஏமாந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடி க்கைகள் ஆகியவை தொடர்பாக மாநகர போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இணையதள குற்றவாளிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர், பாதிக்கப்பட்டோர் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? ஆகியவை குறித்த அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் எளிதில் சிக்கி விடுகின்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்ற வாளிகளை பிடிப்பத ற்காகவே தனிப்படை இயங்கி வருகிறது. எனவே ஆன்லைன் பணமோசடி, ஓ.டி.டி மூலம் பணம் இழந்தவர்கள், கிரெடிட் கார்டு மோசடி, இ-காமர்ஸ் மோசடி மற்றும் பல்வேறு அம்சங்கள் வாயிலாக பணம் இழந்தவர்கள் உடனடியாக கட்டணம் இல்லா தொலைபேசி எண்:1930 மூலம் தொடர்பு கொண்டு புகார் தரலாம். இதுதவிர www.cybercrime.gov.in இணையத்தளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். இணைய த்தளமோசடியில் பணம் இழந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் புகார் கொடுக்கிறா ர்களோ, அந்தளவுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.
ஹலோ...
பாட்டிம்மா..
யாருப்பா...?
போலீஸ், பாட்டி!
போலீசா....?
பயப்படாதீங்க பாட்டி! உங்களுக்கு உதவி செய்யத்தான் பேசுறேன். இனி தினமும் இப்படி பேசுவேன். பக்கத்தில் புள்ள இல்லைன்னு கவலைப்படாதீங்க. உங்க பிள்ளை மாதிரி என்னை நெனச்சுக்குங்க! என்ன உதவி வேணுமின்னாலும் கேளுங்க...
என்ன தம்பி ஆச்சரியமா இருக்கு. போலீசுங்கிறே... எனக்கு உதவி செய்யப் போவதா சொல்றே...
நிஜம்தான் பாட்டி, உங்களைப் போல் ஆதரவு இல்லாம இருப்பவர்களுக்கு உதவி செய்கிறோம்.
கேக்கவே சந்தோஷமா இருக்குப்பா. ரொம்ப நன்றிப்பா...!

பராமரிக்க ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கலாம். அவர்களுக்கு அது தேவையில்லை. பக்கத்தில் இருந்து அன்பு காட்டி அரவணைக்க ஒரு அன்புக்கரம் தேவை. அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் பணம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களை கவனிக்க மனம் இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளமை, வளமை, சிறப்பு என்று வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து முதுமை என்னும் கடைசி கட்டத்தில் கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை கவனிக்கவும், பராமரிக்கவும் ‘ஹலோ திட்டம்’ என்ற புதிய மனிதநேய திட்டத்தை கோவை போலீசார் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
மாவட்டத்தில் நிராதரவாக இருக்கும் முதியோர் பற்றி கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். 700 பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நலம் விசாரிப்பதோடு ஏதேனும் உதவிகள் தேவையா? என்று கேட்டறிந்து உதவுவார்கள். ஒரு மகனாக, பேரனாக மனித நேயத்தோடு முதியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்கிறார்கள்.
காக்கி சட்டைக்குள் ஈரம் அல்ல. இதயம் இருக்கிறது. அது துயரத்தில் தவிப்பவர்களுக்காக துடிப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
கோவை போலீசுக்கு ஒரு பெரிய “சல்யூட்”. #HelloPlan






