search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை திருட்டு"

    • 2 தொழிலாளர்கள் வந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 38). இவர் வருமான வரித்துறை துணை கமிஷனராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-எனது தாய் வீட்டில் உள்ள கபோர்டில் அவரது 2½ பவுன் தங்க வளையல்களை கழற்றி வைத்து இருந்தார்.சம்பவத்தன்று எங்களது வீட்டிற்கு புதிதாக கபோர்டு அமைக்க அளவு எடுப்பதற்காக 2 தொழிலாளர்கள் வந்தனர். அவர்கள் சென்ற பிறகு எனது தாயின் 2½ பவுன் தங்க வளையல்கள் மாயமாகி இருந்தது. எனவே அதனை திருடி சென்ற நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×