search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிட்"

    • அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேருக்கு தொற்று பாதிப்பு.
    • உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவர் பாதிப்பு.

    இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனாவின் துணை மாறுபாடு வகை ஜேஎன்.1 தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513 ஆகி பதிவாகியுள்ளது.

    இந்திய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) அறிவிப்பின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்பட தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513ஆக உள்ளது.

    இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேரும், கர்நாடகாவில் 249 பேரும் ஜேஎன்1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தொடர்ந்து, ஆந்திராவில் 189 பேரும், கேரளாவில் 156 பேரும், குஜராத்தில் 126 பேரும், மேற்கு வங்கத்தில் 96 பேரும், கோவா 90 பேரும், தமிழ்நாட்டில் 89 பேரும்,

    ராஜஸ்தானில் 38 பேரும், தெலுங்கானாவில் 32 பேரும்,

    சத்தீஸ்கரில் 25 பேரும், டெல்லியில் 21 பேரும், உத்தரபிரதேசத்தில் 9 பேரும், அரியானாவில் 5 பேரும், ஒடிசாவில் 3 பேரும், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜேஎன் 1 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் ஜேஎன்1 புதிய பாதிப்பு இல்லை என டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உறுதிப்படுத்தினார். 

    இதுகுறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில்," பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். நேற்று, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 636 சோதனைகளை மேற்கொண்டோம். மூன்று மரபணு வரிசைமுறை முடிவுகள் நேற்று வந்தன. அவற்றில் இரண்டு பழைய ஓமிக்ரான் வகைகள் மற்றும் ஒன்று ஜே.என்.1 ஆகும்.

    புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.

    டெல்லியில் தற்போது ஜேஎன்-1 வகை புதி பாதிப்பு இல்லை.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 692 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த  எண்ணிக்கையில் நான்கு அதிகரித்து, 4,097 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சக தரவு தெரிவித்துள்ளது.

    ×