search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாரி நோய் தடுப்பூசி முகாம்"

    • மீனவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது.
    • மீனவர்களுக்கு என்னென்ன நல உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறது.

    தூத்துக்குடி:

    கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4-வது சுற்றினை இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் சேர்ந்து எல்லா கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் நடைபெற உள்ளது.

    கால்நடைகளுக்கு இந்த கோமாரி நோய் தாக்கினால் வாயில் கால்களில் புண் ஏற்படும், பால் கறப்பது குறைந்து விடும் மற்றும் சினையாக இருக்கும் மாடுகள் கரு சிதைவும் ஏற்படும். அது மட்டுமில்லாமல் கன்றுக்குட்டிகள் இறப்பதற்கும் வாய்ப்புண்டு.

    அந்த நிலைகளை எல்லாம் மாற்றுகின்ற வகையிலே தமிழகம் முழுவதும் 21 நாட்கள் நடைபெறுகிற இந்த முகாமில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இது போன்று அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மீன்வளத்துறை சிறப்பாக செயல்படுகிறது.

    மீனவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது. மீனவர்களுக்கு என்னென்ன நல உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறது. மீன் வளர்ச்சியிலும், மீன் குஞ்சுகள் உற்பத்தியிலும், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை மேற்கொள்ளவும் தமிழகம் உயர்வதற்கான வழிவகைகளை மீன்வளத்துறைக்கு முதல்வர் தந்திருக்கின்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, சண்முகையா எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்க ளுக்கும் இலவசமாக 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி உள்ளது.

    இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுக்கள் 2 லட்சத்து11 ஆயிரத்து 458 மற்றும் எருமை மாடுகள் 742 என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 மாடுகள் பயன்பெற உள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 57 குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை கால்ந டைகளுக்கு செலுத்து வதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட முடியும்.

    இதனால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவை மாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பேணி பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், துணை இயக்குநர் முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
    • கால்நடை வளர்ப்போர் மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கள்ளப்பாளையம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் பிரியாசெந்தில் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரியலட்சுமி, இச்சிப்பட்டி கால்நடை ஆய்வாளர் சத்யா, கால்நடை ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

    வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம், செந்தேவிபாளையம், சாமளாபுரம், பள்ளபாளையம், காளிபாளையம்,வி.அய்யம்பாளையம், பரமசிவம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பூசிமுகாம் நடைபெறவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை(திருப்பூர்) கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.ஆகவே சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். 

    • எருதுகளின் வேலைத்திறன் குறைவதுடன், இளங்கன்றுகளின் இறப்பு சதவீதமும் உயரும்.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மூன்றாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசித் திட்டம் மாா்ச் 1 ந்தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான மூன்றாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசித் திட்டமானது மாா்ச் 1 ந் தேதி தொடங்கி மாா்ச் 21 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கோமாரி நோயானது கால்நடைகளுக்கு கால், வாய்நோய் மற்றும் காணை என்றழைக்கப்படும் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது.

    பொதுவாக கலப்பின மாடுகளை அதிகமாக இந்த நோய் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயால் கறவை மாட்டின் பால் உற்பத்தி குறைவதுடன், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறைவதுடன், இளங்கன்றுகளின் இறப்பு சதவீதமும் உயரும்.

    இதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மாா்ச் 1 முதல் மாா்ச் 21 ந் தேதி வரையில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளோா் கால்நடை நிலையங்களில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா். 

    ×