search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாரி"

    • காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் ஊராட்சி, காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும் 63,328 எருமையினங்களுக்கு என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி பணி 15 ஊராட்சி ஒன்றியங்களில் 105 குழுக்கள் ஏற்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசிப் பணியினை மேற்கொள்ள உள்ளது.

    இந்த வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் கிராமம், காட்டுப்பாளையத்தில் இன்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இளநகர் ஊராட்சியில் நடைபெறும் முகாமில் 7 கிராமங்களை சேர்ந்த 348 பசுக்கள், 173 எருமைகள் என மொத்தம் 521 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

    விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருமை ஆகிய கால்நடைகள் இன்று முதல் 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களில் நடைபெறும். பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து தெரிவிக்கப்படும்.

    எனவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு டாக்டர் நடராஜன், துணை இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, உதவி இயக்குநர் டாக்டர் மருதுபாண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    • கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை நோய் ஆய்வு மற்றும் தடுப்பூசி தொழில்நுட்பக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைகளை தாக்கும் கோமாரி அம்மை மற்றும் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் சென்னை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்தியநாராயணன் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் லதா, கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் டாக்டர் பொன்னம்பலம், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் ராஜேந்திரன், கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×