search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளு"

    • கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான்.
    • கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான்.

    கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான். அதிலும் கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

    தேவையானபொருட்கள்:

    முளை விட்ட கொள்ளு - 200 கிராம்,

    கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்),

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்),

    நறுக்கிய புதினா கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,

    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப),

    நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    உப்பு- தேவைக்கேற்ப

    சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு,

    எண்ணெய் - கால் கிலோ.

    செய்முறை:

    கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்க வேண்டும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைக்க வேண்டும். கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.

    • புதுக்கோட்டையில் ெகாலு பொம்மை விற்பனை அமோகமாக நடக்கிறது
    • நவராத்திரி விழாவையொட்டி

    புதுக்கோட்டை:

    நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக  நடக்கிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் புதுக்கோட்டையில் களைகட்ட தொடங்கி உள்ளது. விழாவையொட்டி புதுக்கோட்டை சாந்தநாத அம்மன்  சன்னதி அருகிலுள்ள பூஜை பொருட்கள் கடைகளில்    பல வண்ண வடிவில் சிறியது முதல் பெரியது வரை கொழு  பொம்மைகள் விற்பனை க்கு  வந்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து வியாபாரி சேகர் கூறுகையில்,  கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட நவராத்திரி கொலு பொம்மை விற்பனை இந்த ஆண்டு அமோகமாக நடைபெறுகிறது. விற்பனைக்காக கடைக்காரர்கள் மதுரை சென்னை, பெங்களூர் கல்கத்தா   உள்ளிட்ட ஊர்களிலிருந்து விதவிதமான கொலு பொம்மைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    மக்களும் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். இதில் மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

    இதேபோன்று திருவள்ளுவர், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி விவேகானந்தர் போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது என்று சேகர் கூறினார்.

    ×