search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை செய்த வாலிபர்"

    • செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சந்திரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கொமரன். இவரது மகன் கருப்புசாமி (32). அதே பகுதியை சேர்ந்த வர் முருகன். இவரது மகன் சந்திரன் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்கள் பனியன் கம்பெனி யில் தொழிலாளிகளாக வேலை செய்து வரு கிறார்கள்.

    இந்நிலையில் கருப்புசாமி செல்போனை சந்திரன் எடுத்து சென்றதாக கூறப் படுகிறது. இது குறித்து கருப்புசாமி, சந்திரனிடம் கேட்டார். அப்போது கருப்புசாமியை சந்திரன் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி விட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து கருப்புசாமி வீட்டுக்கு சென்று தூங்கி னார். இதை தொடர்ந்து காலை அவரது பெற்றோர் அவரை எழுப்பினர். அப்போது கருப்புசாமி இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கருப்புசாமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கருப்புசாமியும் சந்திரனும் மது குடித்ததாகவும், போதையில் செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்புசாமியை சந்திரன் ரோட்டில் கீழே தள்ளி விட்டார்.

    இதில் கருப்புசாமி தலையில் அடிபட்டு இருக்கலாம். அது தெரியாமல் அவர் தூங்கியதால் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வரப்பாளையம் போலீசார் சந்திரனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    ×