search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "under the influence of"

    • செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சந்திரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கொமரன். இவரது மகன் கருப்புசாமி (32). அதே பகுதியை சேர்ந்த வர் முருகன். இவரது மகன் சந்திரன் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்கள் பனியன் கம்பெனி யில் தொழிலாளிகளாக வேலை செய்து வரு கிறார்கள்.

    இந்நிலையில் கருப்புசாமி செல்போனை சந்திரன் எடுத்து சென்றதாக கூறப் படுகிறது. இது குறித்து கருப்புசாமி, சந்திரனிடம் கேட்டார். அப்போது கருப்புசாமியை சந்திரன் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி விட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து கருப்புசாமி வீட்டுக்கு சென்று தூங்கி னார். இதை தொடர்ந்து காலை அவரது பெற்றோர் அவரை எழுப்பினர். அப்போது கருப்புசாமி இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கருப்புசாமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கருப்புசாமியும் சந்திரனும் மது குடித்ததாகவும், போதையில் செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்புசாமியை சந்திரன் ரோட்டில் கீழே தள்ளி விட்டார்.

    இதில் கருப்புசாமி தலையில் அடிபட்டு இருக்கலாம். அது தெரியாமல் அவர் தூங்கியதால் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வரப்பாளையம் போலீசார் சந்திரனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×