search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol died"

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார்.
    • இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார். மேட்டுப்பாளையம் அருகே கல்மேடுபேட் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது40). இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    சுகுமார் கல்மேடுபேட் பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் கழிவறையில் தங்கி விடுவார். அவருக்கு அவரது மனைவி அருணாதேவி சாப்பாடு கொடுத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் அருணாதேவி கணவருக்கு சாப்பாடு கொடுக்க கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு சுகுமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சுகுமார் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×