search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
    X

    கோப்பு படம்

    அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

    • மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார்.
    • இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்து போனார். மேட்டுப்பாளையம் அருகே கல்மேடுபேட் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது40). இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    சுகுமார் கல்மேடுபேட் பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் கழிவறையில் தங்கி விடுவார். அவருக்கு அவரது மனைவி அருணாதேவி சாப்பாடு கொடுத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் அருணாதேவி கணவருக்கு சாப்பாடு கொடுக்க கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு சுகுமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சுகுமார் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×