search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாரம் ராமர் கோவில்"

    • பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதையொட்டி கோவி லில் உள்ள சர்வ சித்தி வலம்புரிவெற்றிவிநாயகர், மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள ராம பெரு மான், அதன் எதிரே அமைந்து உள்ள 9 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, மா பொடி, களபம், சந்தனம், விபூதி, குங்குமம், மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்நடந்தது.

    அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் ராமபிரா னுக்கு வெள்ளிஅங்கி சாத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆஞ்சநேயருக்கு முழு உருவ பஞ்சலோக அங்கிசாத்தி 1008 வடை மாலை அணிவித்து மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகருக்கும் மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர் இரவு 7.30 மணிக்கு சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகர், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாரதனையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்தி ரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ஏ.பி.முத்து, துணைத்தலைவர் ராஜகோபால், மேற்கு குழு உறுப்பினர் அய்யம் பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×