search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி"

    • இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
    • தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
    • பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர்

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமையில் நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை சந்திப்பில் நடந்த பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கொடியை எரித்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாவட்ட துணைத்தலைவர் பால்மணி,ஜோன்ஸ் இம்மானு வேல், நகர தலை வர்கள் ஜெகன், குமார் வக்கீல் பிரிவு தலைவர் ஜெபஸ்டின், வட்டாரத் தலைவர் டென்னிஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்திவாகர் மற்றும் நிர்வாகிகள்மனு கொடுக்க வந்திருந்தனர்.

    ×