search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது பறிமுதல்"

    பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்

    கன்னியாகுமாரி:

    இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப் பன் ேகாபு (43) இவரது மனைவி துர்கா (38).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார்ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமா ரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந் தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஆறுமுகம் பிள்ளை கூறியதாவது:-

    எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற் பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திர மடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    போலீசார் கைது செய் யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாம னார் மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னங்குப்பம் கிராமத்திற்கு மேற்கே உள்ள மந்தவெளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் மணல் இருவர் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட அவர்கள் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் பொன்னகுப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை 55 என்பவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய சுபாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×