search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே: மோட்டார் சைக்கிளில்  மணல் கடத்தியவர் கைது
    X

    பண்ருட்டி அருகே: மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

    • பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னங்குப்பம் கிராமத்திற்கு மேற்கே உள்ள மந்தவெளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் மணல் இருவர் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட அவர்கள் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் பொன்னகுப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை 55 என்பவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய சுபாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×