search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள சுகாதாரத்துறை மந்திரி"

    • கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
    • இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    பத்தனம்திட்டா:

    கேரளாவில், புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதியவகை கொரோனா குறித்து கேரள மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போதுதான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது.

    கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதியவகை கொரோனா இருக்கிறது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது.அதே சமயத்தில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×